புதுகை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் 2022 டிசம்பர் மாதம் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி போலீசாரால் குற்றம் சாட்டப்பட்ட காவலர் முரளி ராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் இன்று புதுகை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்நிலையில் அவர்களுக்கு வரும் 03. 04. 2025 வரை ஜாமீன் வழங்கி நீதிபதி பாரதி உத்தரவிட்டார்.