புதுகை அசோக் நகரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பொதுச் செயலாளர் இபிஎஸ் பிறந்தநாளை எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நேற்றுநடைபெற்றது. அக்கூட்டத்திற்கு விராலிமலை எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில் ரத்த தானம் செய்வது, ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வது, பள்ளிக் குழந்தைகளுக்கு புத்தகம், விளையாட்டுப் பொருட்கள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.