புதுக்கோட்டை மாவட்டம் சிப்காட்டில் தனியாருக்கு சொந்தமான நிறுவனத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் பசு மாடு ஒன்று விழுந்து விட்டது. இதை பார்த்த அப்பகுதியினர் இது குறித்து சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல் ரகுமான் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பசுமாட்டை கயிற்றின் உதவியோடு உயிரோடு மீட்டனர்.