தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பரவலாக உள்ளது. இதனை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் காய்ச்சல் முகாம்கள் ஆங்காங்கே நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதில் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் கடந்த 1-ந் தேதி முதல் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்பட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 36 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.