புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கறம்பக்குடி - புதுக்கோட்டை சாலையில் குடிநீர் வராததை கண்டித்து, கறம்பக்குடி தாலுகா, செங்கமேடு ஊராட்சிக்குட்பட்ட கண்ணுத்தோப்பு கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கறம்பக்குடி - புதுக்கோட்டை
போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.