புதுக்கோட்டை பெருங்களூரை சேர்ந்தவர் அழகர்(36). ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். நேற்று கவிநாடு கண்மாயில் மர்மமான முறையில் அழகர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் திருக்கோவிலூர் காவல் நிலையத்தினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.