கீரனுார் அருகே குளத்துார் மேலத்தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தி (75). நேற்று முன்தினம் இரவு புறவழிச்சாலையில் உள்ள ஓட்டலில் உணவு வாங்கிக்கொண்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் மோதியதில் துாக்கி வீசப்பட்ட பாப்பாத்தி அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து கீரனுார் போலீசார் வழக்குப்பதிந்து காரை ஓட்டி வந்த திருச்சி காட்டூரை சேர்ந்த அலாவுதீன்(53) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.