கல்லணை கால்வாய் சீரமைப்பு பணி அமைச்சர் ஆய்வு!

85பார்த்தது
கல்லணை கால்வாய் சீரமைப்பு பணி அமைச்சர் ஆய்வு!
ஆலங்குடி அருகே மேற்பனைக்காட்டில் கல்லணை கால்வாயில் தரைப் பகுதியில் சிமென்ட் தளம், தடுப்பு சுவர்கள், பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே சிமென்ட் தளம் அமைக்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் சார்பில் மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே மனு அளிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டதண்ணீர் நேற்று கல்லணை வந்தடைந்தது கல்லணையில் இருந்து கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் மேற்பனைக்காடு கல்லணை கால்வாயில் நடந்து வரும் பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதால் தளம் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி