கீரனுார் அருகே உள்ள மங்கத்தேவன்பட்டியை சேர்ந்தவர் சதீஷ் (47). விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதை மனைவி பாண்டிச்செல்வி கண்டித்தார். இதனால் மனமுடைந்த சதீஷ் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு கீரனுார் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் சதீஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மனைவி திட்டியதால் விரக்தியடைந்து விஷமருந்தி கணவர் தற்கொலை செய்துகொண்டார் என்று தெரிவித்தனர். இதுகுறித்து கீரனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.