கீரனுார்: கடலுார் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம்(42). இவரது மனைவி அன்பரசி (39). இவர்கள் இருவரும் காரில் பிள்ளையார் பட்டி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய் துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினர். காரை ராமலிங்கம் ஓட்டினார். புதுகை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கீரனுார் அருகே அம்மாசத்திரம் பகுதியில் கார் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இறங்கி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த இருவரையும், அந்த வழியாக வந்த குளத்துார் தாசில்தார் கவியரசு மற்றும் அலுவலர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. விபத்து குறித்து கீரனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.