புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, கீரனூர் அருகே உள்ள மேல புதுவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்
மாரி மகன் மதியழகன் (47). இவருக்கும் இவரது மனைவி சாந்தி (35) என்பவருக்கும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன் தினம் வீட்டிலிருந்த மதியழகன், மயங்கி கீழே விழுந்தார். இதனைக்கண்ட குடும்பத்தினர் மதியழகனை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே மதியழகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சாந்தி கொடுத்த புகாரின் பேரில், கீரனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மரியதாஸ் வழக்கு பதிவு செய்ததுடன், மதியழகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.