புதுகை, கீரனூரை சேர்ந்தவர் சண்முகம் (65) இவர் பைக்கில் கீரனூரிலிருந்து புதுகைக்கு சென்றுள்ளார். அப்போது, நெடுஞ்சேரி பெட்ரோல் பங்க் அருகே உள்ள சாலையில் அவருக்கு எதிரே பைக்கில் வந்த பாலசுப்பிரமணியன் (17) என்பவர் மோதியதில் சண்முகத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவரது மகன் அளித்த புகாரில் வெள்ளனுர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.