புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் பேருந்து முருங்கக்கொல்லை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளது. இதில் இரண்டு பள்ளி மாணவர்கள் உட்பட 13 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மழையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மழையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.