அறந்தாங்கி, பூவாத்தகுடி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சுதாதேவி (37). இவருக்கு திருமணம் ஆகி 10 வருடமான நிலையில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று தீராத வயிற்று வலி காரணமாக, பூவாத்தக்குடியில் உள்ள அவரது வீட்டில் எலி பேஸ்ட்டை உட்கொண்டதை அடுத்து மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது தாய் அறந்தாங்கி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.