புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் பேராவூரணி ரோடு வாரச்சந்தையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுடன் இணைந்து வாரச்சந்தை தூய்மை செய்யப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் நகராட்சி துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.