மணமேல்குடி: மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல்

74பார்த்தது
மணமேல்குடி: மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, மணலூர் அருகே உள்ள சிறுவயலைச் சேர்ந்த குமார் (40), சந்தோஷ் (27) ஆகிய இருவரும் செல்லப்பன்கோட்டை வெள்ளாற்று அருகே மாட்டு வண்டியில் 1/4 யூனிட் மணல் கடத்தலில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மணமேல்குடி காவல் துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களிடமிருந்து 1/4 யூனிட் மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி