புதுக்கோட்டை, அம்மாபட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையும், அறந்தாங்கி அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. இதில், 40 யூனிட்டுகள் இரத்தம் கொடையாக பெறப்பட்டது. இந்த இரத்ததான முகாம் மாவட்ட தலைவர் சித்திக் ரகுமான் தலைமையில் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.