சிலாட்டூர் அருகே மதுபோதையில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு!

55பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அழியாநிலை வடக்கு குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வம் (52). இவருக்கு திருமணம் ஆகி 28 வருடம் ஆகிய நிலையில் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மது போதையில் வடக்கு குடியிருப்பில் உள்ள பாலத்தில் அமர்ந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி