புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் கடைத்தெருவில் வசிக்கும் பொது மக்களுக்கு சுடுகாடு இல்லாததால் வெள்ளாற்றங் கரையோரத்தில் இறந்தவர்களின் சடலங்களை எரிக்கும்அவல நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் எரிவாயு தகனம் மேடை அமைத்துக் கொடுக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.