புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மாங்குடியை சேர்ந்தவர் அருண்குமார் (30). இவர் எட்டியதலி கீழவ கண்மாய் அருகே உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு எதிரே பைக்கை ஓட்டி வந்த குமார்(39) மோதியதில் அருண்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, அருண்குமார் அளித்த புகாரில் அறந்தாங்கி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.