அறந்தாங்கி அடுத்த ரத்தினக்கோட்டையை சேர்ந்தவர் ஸ்ரீரங்கம் (70). இவர் ரத்தின கோட்டை கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு எதிரே பைக்கை ஓட்டி வந்த பாண்டியராஜன் (36) மோதியதில் ஸ்ரீரங்கத்திற்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, அவரது மகன் அளித்த புகாரில் அறந்தாங்கி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.