புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியிலிருந்து தஞ்சாவூர் நோக்கி பைக்கில் ராஜ்குமார் (33), பப்பு குமார் (33) ஆகிய இருவரும் சென்றனர். அப்போது ஆலங்குடி படேல் நகர் அருகே அவருக்கு எதிரே பைக்கில் வந்த சத்தியசீலன் (43) மோதியதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ராஜ்குமார் அளித்த புகாரில் ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.