ஆலங்குடி அருகே கோவில் உண்டியல் திருட்டு!

67பார்த்தது
ஆலங்குடி அருகே கலிபுல்லா நகரில் பிரசித்தி பெற்ற சிவசக்தி விநாயகர் கோவில் உள்ளது. நேற்று காலை கோவிலை சுத்தம் செய்ய அதே பகுதியை சேர்ந்த பக்தவச்சலம் மனைவி சீதாலெட்சுமி வந்தார். அப்போது கோவிலின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கோவிலில் வைத்திருந்த 2 அடி உயர உண்டியலை மர்ம ஆசாமிகள் தூக்கி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரில் ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி