புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கறம்பக்குடி காவல்துறைக்கு கிடைத்த தகவலின்பேரில் கறம்பக்குடி காவல் உதவி ஆய்வாளர் விக்னேஷ் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சட்ட விரோதமாக அக்னி ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்த 9 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.