இலுப்பூர் தீயணைப்புதுறை சார்பில் தென்மேற்கு பருவமழையையொட்டி
பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையில் இன்று இலுப்பூர் கோமுட்டி ஊரணியில் நடந்தது.
இதில் மழை வெள்ளம், விபத்து, பேரிடர் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்பது, அவர்களுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.