ஆலங்குடி அருகே உள்ள மாங்காடுபட்டி புஞ்சை கிராமத்தை சேர்ந்தவர் குகன் (23) இவர் நேற்று பைக்கில் புளிச்சங்காடு கைகாட்டி சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினார். அப்போது புளிச்சங்காட்டைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்(45) என்பவர் ஓட்டிவந்த சைக்கிள் மீது எதிர்பாராதவித மாக பைக் மோதியது. இதில், கீழே விழுந்து தலையில் படுகாயமடைந்த குகனை அப்பகுதி மக்கள் மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில்படு காயமடைந்த ராமகிருஷ்ணன் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வடகாடுபோலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.