ஆலங்குடி, சந்தைப்பேட்டை பகுதியில் சாம்பிராணி குளம் உள்ளது. இந்த குளக்கரையில் தற்போது முள் செடிகள், பாசிகள் அதிகளவு வளர்ந்திருப்பதோடு குளம் ஓரத்தில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படும் சூழல் உள்ளதால், இந்த குளத்தை தூர்வார சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.