ஆலங்குடி கலைஞர்சாலை பள்ளிவாசல் தெரு சந்திப்பில், நீண்ட காலமாக நெடுஞ்சாலைத்துறையினரால், விடுபட்ட இடத்தில் சாலை சரி செய்யப்படாமல் உள்ளது. இந்த சாலை முக்கியமாக நாடியம்மன்கோவில், உள்கடைவீதிக்கு, பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லக்கூடிய சாலையாகும். வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும், மிகவும் சிரமமாக உள்ளது. மக்கள் நலன்கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.