கறம்பக்குடி அருகே தீத்தான் விடுதி குளக்கரையில் சட்ட விரோதமாக கள் விற்பனை நடைபெறுதாக வந்த தகவலை அடுத்து கறம்பக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதேஸ்வரன் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். இதில், மணிமாறன் (19) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 9 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.