புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. குடிசை மாற்று வாரிய தலைமை அதிகாரி ரவிச்சந்திரன், குடிசை மாற்று வாரிய உதவிப் பொறியாளர் அனில்குமார், இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். இந்த ஆலோசனையில் கண்டக்டர் தோட்டம் பகுதியில் உள்ள அரசு குடியிருப்புகளில் விடுபட்டு போன குடியிருப்புகளில் மறுசீரமைப்பு செய்தல். கண்டக்டர் தோட்டம் பகுதியில் D-1, D-2, D-3, D-4 ஆகிய நான்கு அரசு குடியிருப்புகளுக்கு செல்லும் வழிகளில் உள்ள சேதமடைந்துள்ள சிமெண்ட் ரோடுகளை புதியதாக அமைத்தல், கோவிந்தசாலை ராஜீவ் காந்தி அரசு குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்புகளையும் சீரமைத்தல் மற்றும் புதுச்சேரி அரசு மூலம் வீடு கட்டுவதற்கான மானிய உதவி தொகை வழங்குதல் போன்ற மக்கள் பிரச்சினை பற்றி ஆலோசனை மேற்கொண்டார்.