புதுச்சேரியில், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
அதனை தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள ரேஷன் கடைகளில், இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஊசுடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரேஷன் கடையில் இலவச அரிசியை, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சரும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான சாய் ஜெ சரவணன் குமார் கலந்துகொண்டு விழாவிற்கு தலைமை தாங்கி அரசூர், பொறையூர், சேந்தநத்தம், அகரம், கூடப்பாக்கம், பிள்ளையார் குப்பம், இராமநாதபுரம், தொண்டமாநத்தம், கரசூர், சேதராப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு ரேஷன் அரிசி வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தொகுதி ஒருங்கிணைப்பாளர் சாய் ஜெ தியாகராஜன், தொகுதி தலைவர் முத்தாலு முரளி, கிளைத் தலைவர்கள், கேந்திர பொறுப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள்,
அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.