புதுச்சேரி மாநிலத்தில் மாசி மகத்தையொட்டி சப்தகிரி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு வடை பாயாசத்துடன் வாழை இலையில் அறுசுவை உணவு பரிமாறினார். தொடர்ந்து துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள், சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பொதுமக்களோடு அமர்ந்து அறுசுவை அன்னதான உணவை உண்டனர். இது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.