மீனவர்கள் கடலில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்

70பார்த்தது
புதுச்சேரி மாநிலத்தில் 2010-ம் ஆண்டு முதல் மீனவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 2 சதவீத தனி ஒதுக்கீடு, 20 சதவீத எம்பிசியில் உள் ஒதுக்கீடாக வழங்கப்பட்டுள்ளது. மீனவ மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடை அதிகரித்து வழங்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மீனவர்களுக்கு அரசு குறைந்தபட்சம் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சுனாமி நினைவுதினமான இன்று 10 சதவீதமாக ஒதுக்கீட்டை வழங்கக்கோரி, அனைத்து மீனவ அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் தலைமைச் செயலகம் எதிரில் உள்ள கடலில் இறங்கி மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடற்கரை சாலையில் பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களோடு போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி