புதுச்சேரி சேதராப்பட்டில் பிளாஸ்டிக் சம்பந்தமான பொருட்களை தயாரிக்கும் உரிமையாளர் ஒருவருக்கு கடந்த மாதம் 13-ஆம் தேதி அவருடைய வாட்ஸ் அப்பிற்கு உங்களுக்கு பங்குச்சந்தையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா பங்குச்சந்தையில் எவ்வாறு முதலீடு செய்வது, லாபம் அதிகம் கிடைக்கும் போன்ற பல்வேறு கேள்விகளுடன் ஒரு whatsapp லிங்க் வந்துள்ளது. நீங்கள் இந்த whatsapp லிங்கில் இணைந்து விட்டால் உங்களுக்கு அனைத்தும் கற்றுக் கொடுக்கப்படும் என்று வரவே அதை நம்பி மேற்படி தொழில் அதிபர் அந்த லிங்கில் இணைந்துள்ளார். மேலும் அவர்கள் கொடுத்த லிங்கிலேயே பணத்தை முதலீடு செய்ய சொன்னதால் அவரும் பணத்தை முதலீடு செய்துள்ளார். அப்போதெல்லாம் அவருடைய தனிப்பட்ட கணக்கில் பணம் இருப்பது போன்று காட்டியுள்ளது. சிறிது சிறிதாக தொழிலதிபர் கடந்த 10 நாட்களில் ஒரு கோடியே 23 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளார். அப்போது அவருடைய கணக்கில் ஆறு கோடியே 69 லட்சம் பணம் இருப்பது போல் காட்டியதால் அதை எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் பணத்தை எடுக்கமுடியவில்லை. இது போலியானதாக இருக்குமோ என்று பயந்து அவர் புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். விசாரணயைில் இது இணைய வழி மோசடிக்காரர்கள் உருவாக்கிய போலியான பங்குச் சந்தை என்பது தெரியவந்தது. அதன் பேரில் புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.