இந்தியா-பாகிஸ்தான் இடையே கடுமையான போர் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உஷார்நிலைபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் லாஸ்பேட்டையில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர், துணை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் வாகனங்களை தீவிர சோதனைக்கு பின்பே உள்ளே அனுமதித்து வருகின்றனர்.