பைக்கில் வந்து ஆசிரியரிடம் தங்க செயின் பறிக்க முயற்சி

67பார்த்தது
புதுச்சேரி பாரதியார் தெரு, காட்டுக்குப்பம், பகுதியைச் சார்ந்த விஜயலட்சுமி(37). இவர் பாகூர் பெண்கள் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி மாலை 04. 30 மணி அளவில் பள்ளியில் தனது வேலையை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது பாகூர் கன்னியக்கோயில் பிரதான சாலையில் கருப்பு கலர் பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் ஆசிரியர் விஜயலட்சுமி பின் தொடர்ந்து வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர் சாதுரியமாக வண்டியை ஓட்டியதால் மர்ம நபர்களால் செயினை பறிக்க முடியவில்லை. இச்சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆசிரியர் விஜயலட்சுமி கணவர் கமல்தீம் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி