புதுச்சேரியில் கட்டிமுடிக்கப்பட்டு அரசின் அலட்சியத்தால் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ள புதிய பேருந்து நிலையத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தி ஆளும் என். ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசையும், புதுச்சேரி நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து அதிமுக சார்பில் புதிய பேருந்து நிலையம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமை நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து பேருந்து நிலையம் திறக்கப்படாமல் உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினர் அனைவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மக்களுக்கு தொடர்ந்து சிரமத்தை ஏற்படுத்தி வரும் ஆளும் அரசு மற்றும் புதுச்சேரி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தின் இறுதியாக பேருந்தை பேருந்துநிலையம் உள்ளே எடுத்து செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.