சொத்துகள் குறித்துவெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

260பார்த்தது
சொத்துகள் குறித்துவெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம். எல். ஏ. பேசியதாவது: - காமாட்சி அம்மன் கோவில் நில அபகரிப்பு பிரச்சனை இவ்வளவு பெரிதாக ஆன பிறகும் முதல்-அமைச்சரும், கவர்னரும் வாய் திறக்காமல் உள்ளனர். இதைப்பற்றி கவலைப்படாமல் மீண்டும் நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம் என மமதையில் சுற்றி வருபவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இந்தியா கூட்டணி பொதுமக்களின் பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. கோவில் சொத்து விவகாரம் நீதிமன்றம் வரை சென்று தீர்வு கிடைத்துள்ளது. கடந்த 10 ஆண்டாக இதே வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர்தான் பதவியில் இருந்துள்ளார். இவர் காலத்தில் பதியப்பட்ட பத்திரங்களையெல்லாம் மறு ஆய்வு செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக விலை நிலங்களை மனைப்பிரிவுகளாக பத்திரம் பதிவு செய்யப்பட்டது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். புதுவை நகர குழுமம், பதிவாளர் அலுவலகங்கள் புரோக்கர்கள் பிடியில் சிக்கி உள்ளது. விலை நிலங்கள் அனுமதியின்றி வீட்டுமனைகளாக பதியப்பட்டுள்ளன. இந்த மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக மோசடியாக பதியப்பட்ட சொத்துக்களின் பட்டியலை ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு சிவா பேசினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி