புதுச்சேரியில் ஒரு HMPV நோய் தொற்று குணமடைந்த 5 வயது குழந்தை

66பார்த்தது
HMPV வைரஸ் தொற்று தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு HMPV தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தை முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த குழந்தைக்கு எடுக்கப்பட்ட ரத்த மாதிரியின் பரிசோதனை முடிவில் HMPV தொற்று இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் குழந்தையின் பெற்றோருக்கு முன்னெச்சரிக்கை சுகாதார விழிப்புணர்வு அளிக்கப்பட்டதாகவும், மேலும் ஜிப்மர் சோதனை கருவிகள் தயாராக இருப்பதாகவும், கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சோதனைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் பரவல் குறித்து பீதியடைய தேவையில்லை என்றும், புதுச்சேரி கோரிமேடு அரசு மார்பு நோய் மருத்துவமனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முதியவர்களை அனுமதிக்க 10 படுக்கைகள் கொண்ட ஐ. சி. யூ. வசதியுடன் கூடிய பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ராஜீவ் காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில், குழந்தைகளுக்கான 6 படுக்கைகள் கொண்ட பிரத்யேக ஐ. சி. யூ. வசதியும் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி