காரைக்கால் அடுத்த திருநள்ளாறு மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் "அங்கக சாகுபடியாளர்” என்ற இளைஞர்களுக்கான திறன் வளர்த்தல் பயிற்சி இன்று தொடங்கியது. பயிற்சியினை வேளாண் அறிவியல் நிலையத்தின் முதல்வர் ரவி துவக்கி வைத்தார். இந்த திறன் வளர்த்தல் பயிற்சியில் இயற்கை விவசாயம் குறித்த பல்வேறு தொழில்நுட்பங்கள் செயல் விளக்கங்களுடன் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 25 இளைஞர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.