புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அரசுப் பள்ளி மாணவ மாணவியர்கள் சட்டப்பேரவையின் நிகழ்வுகளை நேரடியாக அறிந்து கொள்வதற்கு காரைக்கால் நிரவி பாரதிதாசன் அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சட்டப்பேரவைக்கு இன்று வந்து பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து பேரவை நிகழ்வுகளை நேரடியாகப் பார்த்தனர். இதனை தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்தனர். அப்பொழுது முதல்வர் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.