காரைக்காலில் 110/11 கேவி சூரக்குடி துணை மின் நிலையத்தில் தென்னக ரயில்வே தொடர்பான மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற இருப்பதனால் 10. 06. 2024 அன்று காலை 09. 00 மணி முதல் மதியம் 01. 00 மணி வரை திருநள்ளார், அம்பகரத்தூர், நெடுங்காடு மற்றும் விழிதியூர் உள்ளடங்கிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது என மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.