காரைக்காலில் தேசிய மீன் விவசாயிகள் தினம் முன்னிட்டு காரைக்கால் மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை சார்பில் 'கலப்பின மீன் வளர்ப்பில் சமீபத்திய நுட்பங்கள்' குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மீன்வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மீன்வளர்ப்பு குறித்த சமீபத்திய நுட்பங்கள், வளர்ப்பு மீன்களை சந்தைப்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.