காரைக்கால் அடுத்த சேத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் இன்று நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடனாக பால் குடத்தினை ஆண்கள், பெண்கள் என 1000க்கும் மேற்பட்டோர் பால் குடத்தினை தலையில் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக வீதியுலாவாக வந்து ஆலயம் வந்தடைந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.