காரைக்கால் அடுத்த வரிச்சிக்குடியில் அருள்மிகு திருமுக சீதளாம்பாள் அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ துர்க்கை அம்மன் மகளிர் வார வழிபாட்டு மன்றம் சார்பில் மஹா சண்டி ஹோம பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட ஹோம நீரால் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.