காரைக்காலை அடுத்த அத்திப்படுகை கிராமத்தில் முதன்முறையாக சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயி பழனி வேல் என்பவர் தனது கால் ஏக்கர் நிலத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து சின்ன வெங்காயம் விதைகளை வாங்கி விதைத்தார். இந்த சின்ன வெங்காயமானது விதைத்த 90 நாளில் இருந்து 100 நாளில் அறுவடை செய்யக்கூடிய பயிராகும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.