4- வது ஆசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி கோவாவில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும் அளவில் காரைக்கால் பகுதியை சேர்ந்த மாணவி வைஷாலி அவர்கள் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு கோவாவில் நடைபெற்ற இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி ஈரான் அணியை வென்று தங்க பதக்கம் வென்றது. இதனை அடுத்து மாணவி வைஷாலி அவர்களை இன்று காரைக்கால் ஆட்சியர் மணிகண்டன் வாழ்த்து தெரிவித்தார்.