காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் விடுமுறை நாட்கள் என்பதால் பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து ஸ்ரீ சனீஸ்வர பகவானை சாமி தரிசனம் செய்தனர். மேலும் சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.