சனீஸ்வர பகவான் ஆலயத்தில் பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி

83பார்த்தது
சனீஸ்வர பகவான் ஆலயத்தில் பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள ஸ்ரீ சனிஸ்வர பகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கொடி மரத்து விநாயகர் மற்றும் பந்தக்கால்களுக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகமும் அதனை தொடர்ந்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு பந்தக்கால்கள் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருத்தேரோட்டம் 19ம் தேதியும், 20ம் தேதி ஸ்ரீ சனிபகவான் தங்க காக்கை வாகன வீதியுலாவும் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி