காரைக்காலில் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் ரோட்டில் சுற்றிதிரிய விடுவதால் சாலை விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. எனவே கால்நடைகளை ரோட்டில் திரியவிட்டால் கால்நடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காரைக்கால் மாவட்ட போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.